டிரஸ்ஸிங் ரூமில் நடனமாடிய கோலி! குதூகலப்படுத்திய ரிஷப் பண்ட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி டக் அவுட்டான போதிலும், ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தை கண்டு குதூகலமாக நடனம் ஆடியுள்ளார்.
பார்லில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டக்-அவுட் ஆன போதிலும், விராட் கோலி நல்ல மனநிலையில் இருந்தார்.
ஏனெனில், டிரஸ்ஸிங் ரூமில் இருந்து ரிஷப் பண்டின் அதிரடியான இன்னிங்ஸை ரசித்து, ஒரு குதூகலமான ஆட்டத்தை போட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கி, அடுத்தடுத்து பல பவுண்டரிகள் விளாசுவதை, ஷிகர் தவானுடன் அமர்ந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த விராட் கோலி, மிகுந்த உற்சாகமடைந்தார்.
அப்போது ஒரு சிறிய நடனம் கூட ஆடினார். இந்த காட்சி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றது.
அதற்கு முன்பாக அவர், தென்னாப்பிரிக்க இடது கை சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹாராஜிடம் ஐந்தாவது பந்தில் டக்-அவுட்டானார்.
அதன்முலம் இந்த ஆட்டக்கார்களில் 31 முறை டக் அவுட் ஆகி 'அதிக டக்-அவுட்டுகள் எடுத்த ஆட்டக்காரர்களின் பட்டியலில்' இரண்டாவது இடத்தை பிடித்து ஒரு தேவையில்லாத சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.