விராட் கோலி மீண்டும் வருகை! இந்திய அணியில் இடத்தை இழக்கப்போகும் வீரர் யார்?
இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கோலி அணிக்கு திரும்புவதால் அணியில் உள்ள ஒரு வீரர் வெளியேற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி கான்பூரில் நடைபெற்று முடிந்த வேளையில் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வில் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இந்திய அணிக்கு திரும்புவதால் இரண்டாவது போட்டியில் மிடில் ஆர்டரில் இருந்து ஒருவர் நிச்சயம் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அப்படி விராத் கோலி அணியில் இணையும் பட்சத்தில் வாய்ப்பை இழக்க உள்ள மூன்று வீரர்களை இந்த பட்டியலில் காணலாம்
ரஹானே
இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனது பேட்டிங் பார்மை இழந்து தவிக்கிறார். தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் ரகானே வெளியேற்றப் பட வாய்ப்பு உள்ளது.
மயங்க் அகர்வால்
மாயங்க் அகர்வால் இடையில் பார்ம் அவுட் காரணமாக தனது இடத்தை இழந்தார். இந்நிலையில் மீண்டும் தனது வாய்ப்பை இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பெற்ற அவர் முதல் இன்னிங்சில் 13 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 17 ரன்கள் மட்டுமே குவித்ததன் காரணமாக இவரும் அணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர்
தனது டெஸ்ட் கிரிக்கெட்டை தற்போதுதான் ஆரம்பித்த ஸ்ரேயாஸ் அய்யர் 16வது இந்திய வீரராக முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சிலும் இவர் அரை சதம் அடித்து சாதனை புரிந்து இருந்தாலும், இரண்டாம் போட்டியில் வெளியில் அமர வைக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.