தேசிய கீதம் இசைத்த போது.. விராட் கோலி செய்த கீழ்த்தரமான செயல்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தேசிய கீதம் இசைத்தபோது, கோலி சூயிங்கம் மென்று கொண்டிருந்த காட்சிகள் நெட்டிசன்களை கோபப்படுத்தியுள்ளது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
டெஸ்ட் தொடரையும், ஒருநாள் போட்டிகள் தொடரையும் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது.
இந்நிலையில் இன்று 3வது மற்றும் கடைசி போட்டி நடந்து வருகிறது, போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம்.
அப்போது வீரர்கள், அமைதியாக நின்றிருப்பார்கள், தங்களது பார்வையை சிதறவிடாமல் பாடிக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் இன்று கோலி, சாதாரணமாக சூயிங்கம் மென்று கொண்டிருந்தார், இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Virat Kohli busy chewing something while National Anthem is playing. Ambassador of the nation.@BCCI pic.twitter.com/FiOA9roEkv
— Vaayumaindan (@bystanderever) January 23, 2022