கோலி தோல்வியடைந்து விட்டார்! இதை அவரே ஒப்பு கொள்வார்... வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய பிரபல வீரர்
ஆர்சிபி இந்த முறையும் ஐபிஎல்லில் சொதப்பிய நிலையில் கோலியை தோல்வி கேப்டன் என கூறியிருக்கிறார் மைக்கேல் வான்.
140 போட்டிகளில் ஆர்சிபி கேப்டனாக இருந்த கோலி, 64 போட்டிகளில் வென்று 69-ல் தோற்றுள்ளார், தோல்விதான் அதிகம். 3 போட்டிகள் டை ஆகியுள்ளது. ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை.
இது குறித்து கோலியின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக விராட் கோலி ஒரு கோப்பையை கூட வென்றதில்லை.
அதுவும் விராட் கோலி தனக்கென்றே நிர்ணயித்துக் கொண்ட தரநிலையில் கோப்பையை வெல்ல முடியாமல் போனது அவரது தோல்வியே. அவர் தோல்வி கேப்டன் என்று நான் கூறவில்லை, ஆனால் கோலி தன்னையே உள்நோக்கிப் பார்த்தால் ஆர்சிபியில் தான் ஒரு தோல்வி கேப்டன் என்பதை ஒப்புக் கொள்வார்.
இப்படிப்பட்ட உந்துதலான ஒரு வீரர், ஆக்ரோஷ கேப்டன் கையில் கோப்பை இல்லாதது வருத்தமே. மாறாக இந்திய அணியை வழிநடத்தும் போது டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள், டி20 என்று அபாரமான கேப்டனாகத் திகழ்கிறார், இந்திய அணியின் பிஸ்தா கேப்டன் தான் விராட் கோலி. ஆனால் ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் அந்த உயரத்தை அவர் எட்டவில்லை. தோல்வியடைந்து விட்டார் என கூறியுள்ளார்.