இப்படி இருந்தால் விராட் கோஹ்லி திணறுவார்: நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஆருடம்
சவுத்தாம்ப்டன் சீதோஷ்ண நிலை ஸ்விங், சீம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், விராட் கோஹ்லி திணற வேண்டிய நிலை ஏற்படும் என நியூசிலாந்து முன்னாள் கேப்டன் க்ளென் டர்னர் தெரிவித்துள்ளார்.
க்ளென் டர்னர் கூறுகையில், விராட் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தின் வேகம் குறைந்து விட்டதாக நான் யூகமாக சொல்ல விரும்பவில்லை.
ஆனால் ஆடுகளம், ஒட்டுமொத்த சீதோஷ்ண நிலை ஸ்விங் மற்றும் சீம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், நியூசிலாந்தில் திணறியதுபோல், இங்கும் திணற வேண்டிய நிலை ஏற்படலாம்.
மீண்டும் ஒருமுறை சீதோஷ்ண நிலை முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், சொந்த இடத்தில் விளையாடும்போது பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
டெக்னிக் மற்றும் திறமையில் குறிப்பிடத்தகுந்த பகுதியாக விளங்குவார்கள். இந்தியாவில் சில வருடங்களாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், நியூசிலாந்து சூழ்நிலையுடன் இந்திய சூழ்நிலையை ஒப்பிட இயலாது. கடந்த முறை இந்திய அணி நியூசிலாந்து சென்று விளையாடும்போது அது வெளிப்பட்டது.
இங்கிலாந்து சீதோஷ்ண நிலை நியூசிலாந்து அளவிற்கு ஒத்துப்போவதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.