டக்-அவுட் ஆகி தேவையில்லாத சாதனை படைத்த விராட் கோலி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 5-வது பந்தில் டக் அவுட்டாகி, ஒரு தேவையற்ற சாதனையை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ப்ரோடீஸ் இடது கை சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹாராஜிடம் ஐந்தாவது பந்தில் டக்-அவுட்டானதால், ஒரு மறக்க முடியாத ஆட்டமாக அமைந்துள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் மற்றொரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சியால் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்த கோஹ்லி, டூ-ஆர்-டை ஆட்டாமான 2வது ஒருநாள் போட்டியில் ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் வெளியேறினார்.
இதன் மூலம், கோலி ஒரு தேவையற்ற சாதனையை உருவாக்கியுள்ளார்.
ஏனெனில் அவர் இந்திய அணியின் நம்பர்.1 முதல் நம்பர். 7-க்குள் இருந்த துடுப்பாட்டக்காரர்களில் அதிக டக்-அவுட்டுகள் எடுத்த ஆட்டக்காரர்களின் பட்டியலில் (List of most ducks scored by a batsman) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தனது வாழ்க்கையில் 31 டக்-அவுட்டுகள் ஆகி இருக்கிறார். கோலியும் இப்போது 31-வது முறை டக்-அவுட்டாகி சேவாக்குடன் இரண்டாவது இடத்தில் இணைந்துள்ளார்.
முன்னாள் இந்திய கேப்டனும், தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவருமான சவுரவ் கங்குலி 29 டக்களுடன் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார், அதைத் தொடர்ந்து யுவராஜ் சிங் 26 டக்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
முன்னாள் இந்திய தொடக்க வீரரும், 100 சர்வதேச சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேனுமான சச்சின் டெண்டுல்கர் 34 முறை டக்-அவுட்டாகி, பட்டியலில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ளார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இது கோலியின் 14-வது டக் ஆகும். மேலும் 50 ஓவர் வடிவத்தில் கோலியை டக் அவுட் செய்த முதல் சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் ஆனார்.