“நான் மிகவும் பாக்கியசாலி” மனைவி அனுஷ்காவிற்கு விராட் கோலி வாழ்த்து: வைரலாகும் புகைப்படம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 5வது ஆண்டு திருமண நாளில் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோலி அனுஷ்கா திருமணம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் திரைப்பட நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 11ம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்திய பிரபலங்களில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் மிகவும் பிரபலமான ஜோடியாக உள்ளனர், அத்துடன் தற்போது உள்ள இளம் தலைமுறையினருக்கு வாழ்வின் மிகச் சிறந்த உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 11ம் திகதி வாமிகா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
மனைவிக்கு வாழ்த்து
விராட் கோலி அனுஷ்கா சர்மா ஜோடிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கும் இந்த நாளில், விராட் கோலி தனது மனைவிக்கு இணையத்தில் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் புகைப்படத்துடன் “முடிவற்ற பயணத்தில் இது 5வது ஆண்டு, உன்னை பார்த்ததில் நான் மிகவும் பாக்கியசாலி, முழு மனதுடன் நான் உன்னை நேசிக்கிறேன்" என விராட் கோலி தனது அன்பு மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 years on a journey for eternity. How blessed Iam to find you , I love you with all my heart ❤️♾️❤️♾️❤️ pic.twitter.com/PISyxaDD6S
— Virat Kohli (@imVkohli) December 11, 2022
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமண நாளை அவர்களுடன் சேர்ந்து அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.