இந்த தடவையும் சதத்தை கோட்டை விட்ட கோலி! ஆமை வேகத்தில் இரண்டாவது முறையாக அரை சதம்
கோலி இரண்டாவது முறையாக அதிக பந்தில் அரை சதத்தை கடந்திருக்கிறார்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடந்து வருகிறது.
இப்போட்டியில் கோலி 79 ரன்கள் எடுத்தார். இரண்டு வருடங்களாக அடிக்காத சதத்தை இந்த போட்டியில் அடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் மிகவும் பொறுமையாக விளையாடி வந்தார்.
ஆனால் அவரின் சதம் அடிக்கும் கனவு இந்த முறையும் கனவாகவே போனது.
மேலும், இந்திய கேப்டனான கோலி இரண்டாவது முறையாக அதிக பந்தில் அரை சதம் கடந்துள்ளார்.
இது இவரது 28-வது அரை சதமாகும். நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி 158 பந்தில் அரை சதம் கடந்தார்.
விராட் கோலி ஏற்கனவே 172 பந்தில் அரை சதம் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.