ஐபிஎல் 2021! பெங்களூர் ராயல் சேலர்ஞ்சர்ஸ் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 2 இலங்கை வீரர்கள் குறித்து பேசிய கேப்டன் கோலி
ஐபிஎல் 2021 தொடரில் பெங்களூர் ராயல் சேலர்ஞ்சர்ஸ் அணிக்கு 2 இலங்கை வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.
இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது கொரோனா அச்சம் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெறவுள்ளது.
இன்றைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. அதனை தொடர்ந்து நாளை அபுதாபியில் நடைபெற இருக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியில் பெங்களூர் அணி புதிய சீருடையை அணிந்து விளையாடுகிறது. இந்த நிலையில் அணியின் கேப்டன் கோலி அளித்த பேட்டியில், எங்கள் அணியில் தற்போதைய இரண்டாம் பாதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முதலாவது பாதியில் விளையாடிய ரிச்சர்ட்சன் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோர் விளையாடவில்லை அவர்களுக்கு பதிலாக தற்போது இலங்கை வீரர்களான துஷ்மந்தா சமீரா மற்றும் ஹஸரங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அவர்கள் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அங்கிருக்கும் மைதானங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் மைதானங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்.
எனவே இங்கு எவ்வாறு பந்து வீசுவது என்பது அவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். நிச்சயம் அவர்களது வருகை எங்கள் அணிக்கு கூடுதல் பலம் என கூறியுள்ளார்.