இளம் மனைவி கணவனால் படுகொலை? மருத்துவ மாணவி விவகாரத்தில் திடீர் திருப்பம்
கேரளாவை உலுக்கிய மருத்துவ மாணவி விஸ்மயா மரணம் தற்கொலை அல்ல எனவும் அது கொலை எனவும் தந்தையும் சகோதரனும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் பொலிசார் குறிப்பிட்டுள்ளதை உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
கணவரிடம் இருந்து தப்பி சொந்த வீட்டிற்கு சென்றுவிடும் முயற்சியில் இருப்பதாக விஸ்மயா நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளதையும் உறவினர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி தாம் கொலை செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக விஸ்மயா தெரிவித்ததாக அந்த நண்பர் உறவினர்களிடம் தெரியப்படுத்தியிருந்தார்.
சொந்த வீட்டிற்கு தப்ப வாய்ப்பு தேடி இருந்தவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுவது ஏற்புடையதாக இல்லை என விஸ்மயாவின் தந்தை திரிவிக்கிரமன் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளங்கள் அவரின் உடம்பில் இல்லை. கழுத்தில் காணப்படும் காயங்கள் கண்டிப்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
விஸ்மயாவின் மொபைல் போன் உடைக்கப்பட்டது, ஆதாரங்களை சேதப்படுத்தும் முயற்சி எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண வார்த்தை வெளியாகும் முந்தைய நாள் இரவும், தம்மை தேர்வெழுத அனுமதிக்காத கவலையை தாயாரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் விஸ்மயா.
தேர்வுக்கான தொகையை தாயார் அனுப்பி வைக்கவும் கேட்டுள்ளார். இதனிடையே, விஸ்மயாவுக்கு விவாகரத்து வாங்கித்தர குடும்பத்தினர் தயாரானதாகவும், ஆனால் இனிமேல் விஸ்மயாவை துன்புறுத்த மாட்டேன் என உறுதி கூறி கணவன் கிரண் அழைத்து சென்றதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.