விவேக் இறுதி ஊர்வலத்தின் போது பொதுமக்கள் செய்த செயல்! நெகிழ்ச்சி தகவல்
நடிகர் விவேக் இறுதி ஊர்வலத்தின் போது பொதுமக்கள் மரக்கன்றுகளை ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரபல காமெடி நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, இன்று காலை முதலே திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சற்று முன் விவேக்கின் இறுதி ஊர்வலம் துவங்கியது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பொதுமக்கள் பலரும், மரக்கன்றுகளை ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
https://www.youtube.com/watch?v=yd1njWnoDqM
நடிகர் விவேக்கிற்கு மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதே அவரின் ஆசை, அதை செய்வோம் என்ற வகையில் பொதுமக்கள் பலரும் மரக்கன்றுகள் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், விவேக்கின் உடல், விருக்கம்பக்கத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.