கொரோனா தடுப்பூசி போடாதீங்க! என்னை எச்சரித்தார்கள்: விவேக் மறைவுக்கு பின் டிரண்டாகும் சீமான் வீடியோ
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் உயிரிழந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பிரபல நகைச்சுவை நடிகரான மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக்கிற்கு, நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவருக்கு ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் அவரின் மரணத்திற்கும், கொரோனா தடுப்பூசிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று மருத்துவமனை சார்பில் தெளிவிடுபத்தப்பட்டிருந்தாலும், பலரும் இப்போது கொரோனா தடுப்பூசி போட பயப்படுகின்றனர் என்பது தான் உண்மை.
அதற்கு ஏற்ற வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செய்தியாளர் சந்திப்பு வீடியோ ஒன்றி இணையத்தில் டிரண்டாகி வருகிறது.
அதில், சீமான் கொரோனா தடுப்பூசி போட வேண்டாம், எனக்கு தெரிந்த வெளிநாட்டு மருத்துவர்கள் அதை போட வேண்டாம் என்று கூறுகின்றனர்.
முதலில் இதை பிரதமர் மோடி, அதன் பின் அமித் ஷா போன்றோர் போட்டுக் கொள்ளட்டும். கொரோனா பல்வேறு விதமாக பரவி வரும் நிலையில், இந்த தடுப்பூசி எப்படிப்பட்டது. மனிதர்கள் என்ன எலியா? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.