அவர்களுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது... ஜேர்மனியில் ஒலிக்கத் துவங்கியுள்ள குரல்கள்!
போர் செய்ய விருப்பமில்லாத ரஷ்யர்கள் ரஷ்யாவிலிருந்து தப்பி வெளியேறி வருகிறார்கள்.
அவர்களுக்கு ஜேர்மனியில் புகலிடம் கொடுக்கக்கூடாது என குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
அகதிகளை வரவேற்பதற்கு பெயர்பெற்ற ஜேர்மனி, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து உக்ரைனிலிருந்து உயிர் தப்ப ஓடி வருபவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்துவருகிறது.
இந்நிலையில், போர் செய்ய விருப்பமில்லாத ரஷ்யர்கள் ரஷ்யாவிலிருந்து தப்பி வெளியேறி வருகிறார்கள்.
இராணுவத்தில் சேர்க்கப்படுவதை தவிர்ப்பதற்காக, தங்கள் கால்களை முறித்துக்கொள்ளும் ரஷ்ய இளைஞர்களைக் குறித்த செய்திகள் கூட வெளியாகிவருகின்றன.
அப்படி போர் செய்ய விரும்பாத ரஷ்யர்களுக்கு புகலிடம் அளிக்க ஜேர்மனியிலுள்ள பலர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
ஜேர்மன் நீதித்துறை அமைச்சரான Marco Buschmann கூட, புடினுடைய கொள்கைகளை வெறுப்பவர்கள், குடியரசை விரும்புபவர்கள் ஜேர்மனிக்கு வரவேற்கப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார்.
ஆனால், அவர்களுக்கு புகலிடம் கொடுக்கக்கூடாது என ஜேர்மனியிலிருந்து குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
ரஷ்யர்களுக்கு புகலிடம் கொடுக்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் வேறு யாருமல்ல, உக்ரைனிலிருந்து அகதிகளாக ஜேர்மனிக்கு வந்துள்ளவர்கள்தான்.
ஜேர்மனிக்கு வரும் ரஷ்யர்களால் தங்களுக்கு பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படும் என கருதுகிறார்கள் உக்ரைனியர்கள்.
ஆனால், அதை முடிவு செய்வது ஜேர்மனி அரசாயிற்றே!