பேட்டரி தீப்பிடிக்கும் அபாயம்- 40,000 மின்சார SUV-களை திரும்பப் பெறும் Volvo
பேட்டரி தீப்பிடிக்கும் அபாயம் காரணமாக 40,000 மின்சார SUV-களை திரும்பப் பெறுகிறது வோல்வோ.
ஸ்வீடன் வாகன உற்பத்தியாளரான வோல்வோ (Volvo), தனது EX30 மின்சார SUV மொடல்களில் பேட்டரி தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதாக கண்டறிந்து, உலகளவில் சுமார் 40,000 வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, வோல்வோ EX30 மொடல்களில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி தொகுதிகளில் சில தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அதிக வெப்பம் ஏற்பட்டு தீ விபத்து நிகழும் அபாயம் உள்ளது.
வோல்வோ, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டு, இந்த SUV-களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

இந்த பிரச்சினையை இலவசமாக சரிசெய்து வழங்கப்படும் என்றும், தேவையான மாற்றங்களைச் செய்யும் என்றும் வாகன உரிமையாளர்களுக்கு நிறுவனம் உறுதியளித்துள்ளது.
EX30 மாடல், வோல்வோவின் மிகச் சிறிய மற்றும் மலிவான மின்சார SUV ஆகும். 2023-இல் அறிமுகமான இந்த வாகனம், உலகளவில் அதிக வரவேற்பைப் பெற்றது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை, வோல்வோவின் மின்சார வாகன சந்தை வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது.
வோல்வோ அதிகாரிகள், “வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மை. பிரச்சினையை விரைவாக சரிசெய்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |