தேமுதிக கூட்டத்தில் கொடுத்த தக்காளி சாதத்தை சாப்பிட்ட மக்களுக்கு வாந்தி, மயக்கம்
இந்திய மாநிலம் தமிழகத்தில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் மிஞ்சிய உணவை சாப்பிட்ட மக்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உணவு உட்கொண்ட மக்கள்
தமிழக்தில் உள்ள விருத்தாச்சலத்தில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது. அங்கு, மீதமான தக்காளி சாதத்தை கட்சி பிரமுகர் ஒருவர் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு கொண்டு வந்தார்.
பின்பு, நேற்று இரவு அவர் கிராமத்தில் இருந்த மக்களுக்கு அந்த உணவை சாப்பிடுமாறு கொடுத்தார்.
25 பேருக்கு வாந்தி, மயக்கம்
இதனையடுத்து, கட்சி பிரமுகர் கொடுத்த உணவை அங்குள்ள மக்கள் சாப்பிட்டனர். பின்பு, உணவை சாப்பிட்ட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள 25 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடனே, அவர்கள் குடும்பத்தினர் பதறிபோய் நள்ளிரவில் அனைவரையும் பண்ரூட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தேமுதிக கூட்டத்தில் உள்ள உணவை சாப்பிட மக்களுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |