சுவிஸ் வாக்கெடுப்புகளில் முதன்முறையாக ஒரு வித்தியாசமான நிகழ்வு
சில நாடுகளில், மக்கள் தங்கள் சார்பில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பார்கள். அந்த பிரதிநிதிகள் இணைந்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால், அந்த தலைவர் மக்களைக் கலந்தாலோசிக்காமலே முடிவுகள் எடுப்பார்.
சில நாடுகளில், வாக்கெடுப்புகளில் மக்கள் பங்கேற்று, அவர்கள் முடிவு செய்யும் விடயங்களை மட்டுமே அரசு செயல்படுத்தும். அரசு இஷ்டம்போல எந்த முடிவுகளையும் எடுக்கமுடியாது.

சுவிட்சர்லாந்திலும் அப்படித்தான். மக்கள் வாக்கெடுப்புகளில் பங்கேற்று முடிவு செய்யும் விடயங்களை அரசு செயல்படுத்துவதுதான் வழக்கம்.
ஆனால், இம்முறை சற்று வித்தியாசமான விடயம் ஒன்று நடந்துள்ளது.

முதன்முறையாக ஒரு வித்தியாசமான நிகழ்வு
நேற்று, சுவிட்சர்லாந்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
சுவிஸ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கான நிதி வழங்கலை குறைப்பது, திருமண அபராதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது, சுற்றுச்சூழல் கொள்கைகளுக்காக செலவிடுதல் மற்றும், The Cash is Freedom பிரேரணை ஆகியவற்றின் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

அவற்றில், The Cash is Freedom, அதாவது, ரொக்கம்தான் சுதந்திரம் என்னும் ஒரு பிரேரணையை Swiss Freedom Movement என்னும் அமைப்பு முன்வைத்திருந்தது.
ஆனால், அந்த பிரேரணையை ஆதரிக்கவேண்டாம் என்று கூறிய சுவிஸ் அரசு, அதற்கு மாற்றாக ஒரு திட்டத்தை முன்வைத்ததுடன், அரசின் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது.
ஆக, மக்கள் முடிவெடுக்க, அரசு அதை செயல்படுத்துவதற்கு மாறாக, முதன்முறையாக அரசு ஒரு திட்டத்தை முன்வைக்க, மக்களும் அரசு கேட்டுக்கொண்டபடி அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
அரசு முன்வைத்த திட்டத்துக்கு ஆதரவாக 73 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
ஆக, அரசின் ஆலோசனையை மக்கள் நம்பியதின் விளைவே இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் என்கிறார்கள் விமர்சகர்கள்.
இந்த The Cash is Freedom என்பது என்னவென்றால், பல நாடுகளில் பணப்பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமாகிவந்தாலும், இன்னும் மக்களில் பலர் ரொக்கம் பயன்படுத்துவதை விரும்புகிறார்கள்.
தங்கள் பணத்தை இணையத்தின் இடையூறு இல்லாமல் தாங்களே செலவு செய்யும் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் இன்டர்நெட் இல்லாதபோது பணம் செலவிடமுடியாத நிலையை தவிர்ப்பது ஆகிய காரணங்களால் இன்னமும் பலர் ரொக்கம் பயன்படுத்துவதை விரும்புகிறார்கள்.
அதற்காகவே இந்த The Cash is Freedom, என்னும் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது. என்றாலும், அந்த வார்த்தைகளின் பொருள் சற்று அதிக தீவிரமாக இருப்பதாகக் கூறி, அதே விடயம்தான், ஆனால், அந்த வார்த்தைகள் வேண்டாம், அதற்கு மாற்றாக அரசு ஒரு பிரேரணையை முன்வைக்கிறது, அதை ஆதரியுங்கள் என அரசு கூற, மக்களும் அதற்கு உடன்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |