இந்தியாவுக்கு 20 ஆக்ஸிஜன் ஆலைகள் உள்ளிட்ட பல பாரிய உதவிகளை அறிவித்த அமெரிக்க நிறுவனம்!
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் கடுமையாக பாதிக்கபட்டுள்ள இந்தியாவுக்கு பாரிய உதவிகளை அளிக்க வால்மார்ட் நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்தியாவுக்கு கிட்டத்தட்ட 40 நாடுகளிடமிருந்து மருத்துவ உதவிகள் மற்றும் சுகாதார ஆதரவுகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில், அமெரிக்க பன்னாட்டு சில்லறை நிறுவனமான வால்மார்ட் பல பாரிய உதவிகளை அனுப்பவுள்ளதாக உறுதியளித்துள்ளது.
வால்மார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 20 ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் மற்றும் 20 கிரையோஜெனிக் கொள்கலன்களை ஆக்ஸிஜன் சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்காக நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
அத்துடன் 3,000-க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் 500 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சையை வழங்குவதற்காக நன்கொடை அளிக்கும்" என்று அமெரிக்க மாகாணம் ஆர்கன்சாஸை தலைமையிடமாகக் கொண்ட அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், கொரோனா வைரஸின் எழுச்சியை எதிர்த்துப் போராட உதவும் அரசு சாரா நிறுவனங்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
We’re using our global resources to aid India, as associates and communities there battle a devastating COVID-19 surge. Worldwide collaboration is allowing us to counter oxygen shortages, support vaccinations and donate to hospitals and NGOs. https://t.co/knwTj59P8n pic.twitter.com/iiQAKlliPL
— Walmart Inc. (@WalmartInc) April 30, 2021
சனிக்கிழமை வரை, இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ளன என்று இந்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.