இந்தியாவுக்கு எதிரான போட்டியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்... சாம்பியன் ஸ்பின்னர் இல்லாமல் களமிறங்கும் இலங்கை? கசிந்த முக்கிய தகவல்
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் சாம்பியன் ஸ்பின்னர் வாணிந்து ஹசரங்கா இல்லாமல் இலங்கை விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரிலும் விளையாடி வருகிறது.
2-0 என இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டி நாளை கொழும்பு மைதானத்தில் நடைபெறுவிருக்கிறது.
3வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றிப்பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஹசரங்காவுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக இன்றைய போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்றும் இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கசுன் ரஜிதா காயம் காரணமாக வெளியேறிய நிலையில் இன்றைய ஆட்டத்திற்கு இலங்கை அணியில் குறைந்தபட்சம் 2 மாற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளது.
இன்றைய விளையாட்டுக்கு பரிசீலிக்கப்படும் வீரர்களில் அகில தனஞ்சய, ரமேஷ் மெண்டிஸ், இஷான் ஜெயரத்னா மற்றும் பிரவீன் ஜெயவிக்ரேமா ஆகியோர் உள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022