முதல் ஓவர் முதல் பந்திலே டக் அவுட்! இந்திய அணியை ஒற்றை ஆளாக கதறவிட்ட இலங்கை வீரர்: தொடரை வென்று சாதனை
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில், இலங்கை வீரர் வஹிண்டு ஹசரண்ங்கா அற்புதமாக பந்து வீசி மிரட்டினார்.
இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி, இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலிரண்டு போட்டியில் இரு அணிகளுமே தலா 1-1 என்று சமநிலையில் உள்ள நிலையில், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. துவக்க வீரரான ஷிகார் தவான் முதல் ஓவரின் முதல் பந்திலே துஷந்தா சமீரா பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த டேவிட் படிக்கல் 9 ஓட்டங்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சுசாம்சனை, சுழற்பந்து வீச்சாளர் வஹிண்டு ஹசரங்கா டக் அவுட் ஆக்கி வெளியேற்ற, இந்திய அணி ஒரு கட்டத்தில் 4.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 24 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.
அடுத்து வந்த நிடிஸ் ரானாவை(6), தசுன் சனக்கா அவுட்டாக்க, வஹிண்டு தன்னுடைய மாயாஜால சுழற்பந்து வீச்சின் மூலம், இந்திய அணியை கதி கலங்க வைத்தார்.
இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மற்றொரு துவக்க வீரரான ருத்ராஜ் கெய்ட்வாட் 14 ஓட்டங்களும், புவனேஷ்வர் குமார் 16 ஓட்டங்களும், குல்தீப் யாதவ் 23 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாள வஹிண்டு ஹசரங்கா ஒற்றை ஆளாக, இந்திய அணியை கதறவிட்டார். இவர் 4 ஓவரில் 9 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அதன் பின் 82 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இலங்கை அணி, 14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியுள்ளது. மேலும், கடந்த 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிரான தொடர் எதையும் வென்றதில்லை, தற்போது அதற்கு முற்றுப் புள்ளி வைத்து சாதனை படைத்துள்ளது.