உடலில் செரிமான சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ காலையில் இந்த 5 உணவுகளை கட்டாயம் சாப்பிட்டு வந்தாலே போதும்!
உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது.
நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும் உணவை செரிக்க செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த வயிற்று கோளறு ஏற்படும்.
இதனை தடுக்க ஒரு சில உணவுகள் பெரிதும் உதவுகின்றது. காலை உணவாக செரிமான சக்தியை மேம்படுத்து உணவுகளை எடுத்து கொண்டாலே போதும்.
தற்போது உடலில் செரிமான சக்தியை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
- காலையில் எழுந்ததும் பப்பாளி பழம் சாப்பிடுவது நாள் முழுவதும் உங்க செரிமான செயல்பாட்டை அதிகரிக்க உதவி செய்யும். இதில் செரிமான செயல்பாட்டிற்கான பாப்பைன் எனப்படும் என்சைம் காணப்படுகிறது
- ஆப்பிள் காலையில் சாப்பிடுவது நல்லது. மலச்சிக்கலை போக்கி ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு உதவுகிறது இதில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது.
- வெள்ளரிக்காயில் எரெப்சின் என்ற என்சைம் காணப்படுகிறது. இதுவும் ஜீரணம் நன்றாக நடைபெற உதவுகிறது. இது வயிற்று அமில எரிச்சல், வாயுத்தொல்லை மற்றும் பெப்டிக் அல்சர் போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. வயிற்றுக்கு குளிர்ச்சியான தன்மையை கொடுக்கிறது.
- வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இந்த நார்ச்சத்துக்களால் மலம் கழிப்பது எளிதாக இருக்கும். ஒரு வாழைப்பழம் போதும் உங்க காலை வயிற்று பசியை தீர்க்க உதவும்.
- தேன் மற்றும் லெமன் கலந்து வெதுவெதுப்பான நீரில் குடிப்பது நல்ல சீரண சக்தியையும் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இதை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மெட்டா பாலிசத்தை அதிகரிக்க முடியும் இது உங்க உடல் எடையை குறைக்க உதவுகிறது.