மார்பக புற்றுநோயிலிருந்து மீள வேண்டுமா? இப்போ கட்டாயம் இந்த உணவுகளை எடுத்துகோங்க
இன்றைய உலகில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மார்பக புற்றுநோய் உருவாகிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோயால் லட்சக்கணக்கில் மரணம் ஏற்படுகிறது.
மார்பில் கட்டி ஏற்படுதல், மார்பின் மீது தோலை உரிதல், காம்புகளிலிருந்து திரவம் கசியுதல், கழுத்து மற்றும் கக்கத்தில் கட்டிகள் ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.
மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவு உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
அந்தவகையில் மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட என்னமாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
- வால்நட்ஸில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோஸ்டெரால்ஸ் உள்ளன, அவை ஈஸ்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்தவும் மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகின்றன.
- ப்ளூபெர்ரி புற்றுநோய் செல்களை சுய அழிவுக்கு உட்படுத்துவதன் மூலம் மார்பக புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும். நீங்கள் ஸ்மூத்திஸ், ஓட்ஸ் அல்லது தயிர் ஆகியவற்றில் ப்ளூபெர்ரிகளை சேர்த்து உட்கொள்ளலாம்.
- சர்க்கரை வள்ளிக்கிழங்கை தொடர்ச்சியாக சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை உருவாக்ம் ஆபத்து 17 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- ஆளி விதை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் புற்றுநோய்க் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
- பூண்டு அதன் புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளை அல்லிசினிலிருந்து பெறுகிறது, இது பூண்டின் ஒரு அங்கமாகும், இது புற்றுநோய் செல்களைப் பிரிப்பதைத் தடுக்கிறது. இதற்கு பூண்டில் உள்ள ஃபிளாவனோல்கள் காரணமாக இருக்கலாம். பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளை அதிகரிக்க முடியும்.
- க்ரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது. அதன் ஆரோக்கிய நன்மைகளில் முக்கியமான ஒன்று மார்பக புற்றுநோய் வளர்ச்சியை எதிர்ப்பதாகும்.