கொரோனா நோயாளி பெண்ணை சீரழிக்க முயன்ற வார்டுபாய்! மத்திய பிரதேச மருத்துவமனையில் பரபரப்பு
மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணை வார்டு பாய் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில், குவாலியரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 59 வயது பெண், COVID-19 பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என உறுதிசெய்யப்பட்ட நிலையில், கம்பூ காவல் நிலையத்தின் எல்லைக்குள் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவர் சற்று கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால், ஆக்ஸிஜன் ஆதரவு கொடுக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமையன்று, அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் வார்டு பாய், அப்பெண்ணை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.
உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், அந்தப் பெண் ஒரு வழியாக கத்தி கூச்சலிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து வார்டு பாய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் அப்பெண்ணின் குடும்பத்தினர் வார்டு பாயின் வெட்கக்கேடான செயல் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால், அதிர்ச்சியூட்டும் வகையில், அந்த வார்டு பாய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அதற்கு பதிலாக, அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனை ஊழியர்களால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அப்பெண்ணுக்கு அளித்துவந்த சிகிச்சையும் மருத்துவமனையால் நிறுத்தப்பட்டதாக்க கூறப்படுகிறது.
பின்னர், கம்பூ காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் பதிவு செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வார்டு பாய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.