BCCI தேர்வாளர்கள் மீது வாஷிங்டன் சுந்தரின் தந்தை சரமாரி தாக்கு! சதத்திற்கு பிறகு கிளம்பிய பூகம்பம்!
வாஷிங்டன் சுந்தரின் அபாரமான சதம் இந்தியாவை பெரும் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றிய நிலையில், அவரது தந்தை பிசிசிஐ தேர்வாளர்களை கடுமையாக சாடியுள்ளார்.
வாஷிங்டன் சுந்தரின் அபார சதம்
ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டியின் பரபரப்பான முடிவில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜாவின் அற்புதமான சதத்தால் இந்தியா இங்கிலாந்துடன் டிரா செய்துள்ளது.
இங்கிலாந்து தங்கள் முதல் இன்னிங்ஸில் 669 ஓட்டங்கள் குவித்து, 311 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையை எடுத்தபோது இந்திய அணி ஒரு அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டது.
Grateful for the people, and forever grateful to you, God🤍🧿 pic.twitter.com/z5PDiV4Vav
— Washington Sundar (@Sundarwashi5) July 27, 2025
முன்னணி வீரர்களின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், இந்திய மத்திய வரிசை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியில் இருந்து மீண்டனர்.
இந்த போட்டியில், 5வது இடத்தில் பேட்டிங் செய்த சுந்தர், ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் கேப்டன் சுப்மான் கில் (103), 6வது இடத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா (107)*, மற்றும் கே.எல். ராகுல் (90) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
இந்த முடிவு ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவின் வாய்ப்புகளை உயிர்ப்புடன் வைத்துள்ளது, தற்போது இந்தியா 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் பின்தங்கியுள்ளது.
பிசிசிஐ தேர்வாளர்களை சாடிய வாஷிங்டனின் தந்தை
வாஷிங்டன் சுந்தர் ஆட்டத்தைக் காப்பாற்றிய முயற்சிக்கு கிரிக்கெட் உலகம் பாராட்டு தெரிவித்தாலும், அவரது தந்தை எம். சுந்தர், சர்வதேச கிரிக்கெட்டில் தனது மகனுக்குக் கிடைத்துவரும் நிலையற்ற வாய்ப்புகள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தேர்வாளர்களை கடுமையாகச் சாடியுள்ளார்.
"வாஷிங்டன் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார், ஆனால் அவரது பங்களிப்புகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன," என்று எம். சுந்தர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு (TOI) அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
"மற்ற வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன, ஆனால் என் மகனுக்கு மட்டும் இல்லை. இந்த டெஸ்டில் செய்ததுபோல அவர் ஐந்தாவது இடத்தில் தொடர்ந்து பேட் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும், அவருக்கு ஐந்திலிருந்து பத்து நேரடி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் தேர்ந்தெடுக்கப்படாதது ஆச்சரியமாக இருந்தது.”
மேலும், தனது மகன் ஒன்று அல்லது இரண்டு மோசமான ஆட்டங்களுக்குப் பிறகு நீக்கப்படும் ஒரு வழக்கத்தைக் கோடிட்டுக் காட்டினார். 2021-ல் இங்கிலாந்துக்கு எதிராக சுந்தர் அடித்த இரண்டு ஈர்க்கக்கூடிய இன்னிங்ஸ்களை அவர் குறிப்பிட்டார் – சவாலான சென்னை ஆடுகளத்தில் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்கள் மற்றும் அகமதாபாத்தில் அதே அணியின்மீது 96 ஓட்டங்கள்*. "அந்த இரண்டு இன்னிங்ஸ்களும் சதங்களாக முடிந்திருந்தாலும் அவர் நீக்கப்பட்டிருப்பார்," என்று எம். சுந்தர் வருத்தத்துடன் வெளிப்படுத்தினார்.
AR Rahman & Anirudh songs தான் அதிகமா கேட்பேன்! - Washington Sundar🎧🎵
— Star Sports Tamil (@StarSportsTamil) July 26, 2025
📺 தொடர்ந்து காணுங்கள் | England vs India | 4th Test | Day 4 | JioHotstar-ல்#ENGvIND #TeamIndia @Sundarwashi5 pic.twitter.com/LRjI4EDnXZ
இதனை தொடர்ந்து, அவர் ஐபிஎல் போன்ற உள்ளூர் போட்டிகளிலும் விளையாடும் 11 வீரர்களின் பட்டியலில் இருந்து வாஷிங்டன் சுந்தர் நீக்கி வைக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் வாஷிங்டன் சுந்தரின் தொடர்ச்சியான போராட்டம் அவரை மேலும் வலுப்படுத்தியுள்ளது, இப்போது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் அவரது செயல்பாடு அதற்கு ஒரு சான்று என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |