யூரோ கால்பந்து! அரைறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து...உக்ரேனை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் அபார வெற்றி
யூரோ கால்பந்து தொடரின் இன்றைய காலிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்றது.
ஐரோப்பிய நாடுகள் பங்குபெறும் யூரோ கால்பந்து தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று, நாக் அவுட் சுற்று முடிந்து, இப்போது காலிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.
அதன் படி இன்றைய காலிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து-உக்ரைன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி உக்ரைனில் இருக்கும் ரோமில் நடைபெற்று வருகிறது.
Sterling >>>> Kane ⚽
— Match of the Day (@BBCMOTD) July 3, 2021
What a ball! What a start for England!
Watch and listen to #UKRENG on the BBC https://t.co/SgXUFtqSx6 #Euro2020 #bbceuro2020 pic.twitter.com/IFtfHIAFbw
இந்த போட்டியில் வெற்றி பெற்று எப்படியாவது அரையிறுதிக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று இங்கிலாந்து ரசிகர்கள் ஒரு புறமும், உக்ரைன் ரசிகர்கள் ஒரு புறமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க, ஆட்டம் துவங்கிய நான்காவது நிமிடத்திலே உக்ரைன் ரசிகர்களுக்கு இங்கிலாந்து கேப்டன், Harry Kane அதிர்ச்சி கொடுத்தார்.
அவர் அற்புதமாக ஒரு கோல் அடிக்க, அதன் பின் உக்ரை வீரர்கள் கோல் அடிக்க எவ்வளவு முய்ற்சித்து, இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தனர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் அதாவது 45-வது நிமிடம் வரை இங்கிலாந்து 1-0 என்று முன்னிலையில் இருந்தது.
அதன் பின், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் மின்னல் வேகத்தில் பந்தை பாஸ் செய்தனர். அதன் பயனாக ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில், Harry Maguire கோல் அடிக்க 50-வது நிமிடத்தில், மீண்டும் Harry Kane , அதைத் தொடர்ந்து , 66-வது நிமிடத்தில் Jordan Henderson என அடுத்தடுத்து கோல் அடிக்க இங்கிலாந்து அணி இறுதியாக 4-0 என்று முன்னிலை பெற்று வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.