வெயிலில் முகம் கருப்பாகாமல் இருக்க உதவும் தர்பூசணி.., எப்படி பயன்படுத்துவது?
சூரிய ஒளியால் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், முகம் வெள்ளையாக மாற தர்பூசணியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தர்பூசணி ஜூஸ்- 2 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தர்பூசணி ஜூஸ் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
2. தேவையான பொருட்கள்
- தர்பூசணி- சிறிய துண்டு
- வெள்ளரிக்காய்- சிறிய துண்டு
- முல்தானி மெட்டி- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி துண்டுகளை எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அத்துடன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |