சென்னையின் கோட்டையில் எந்த தவறும் செய்யாதீர்கள்! கோஹ்லி அணியை எச்சரித்த வாட்சன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் பலம் வாய்ந்த அணியாக இருக்கும் என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி குறித்து முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் RCB அணியை எச்சரித்துள்ளார்.
அவர் கூறுகையில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இருக்கும் பந்துவீச்சாளர்களின் தரத்தை கருத்தில் கொண்டால், பெங்களூரு வெல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சென்னை அணியின் பலத்தை எதிர்கொள்ள பெங்களூரு அணியில் மாற்றம் செய்வார்கள்.
ஆனால் சென்னை அணியின் கோட்டையான சேப்பாக்கத்தில் எந்த தவறும் செய்யாதீர்கள். அங்கு சிறந்து விளங்குவதை மையமாகக் கொண்டுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அமைப்பும் கட்டமைக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் நூர் அகமது ஆகியோர் அங்கு நிச்சயம் சவாலாக இருப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |