ரஷ்யா-உக்ரைன் இடையே என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயார்: அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு
ரஷ்யா-உக்ரைன் இடையே என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பிஜியில் பிசிபிக் தலைவர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் சந்திப்பில் ஈடுபட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிளிங்கன், ரஷ்யா உண்மையில் உக்ரைன் பிரச்னையை தூதரக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்பினால், அமெரிக்கா அதன் பங்களிப்பை அளிக்க தயாராக இருக்கிறது.
ஆனால், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க முடிவெடுத்தால் அதை எதிர்கொள்ளவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது.
புடின் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க முடிவெடுத்தால், உலகெங்கிலும் உள்ள நேச நாடுகளுடன் இணைந்து கடுமையான பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம்.
உக்ரைன் தன்னை தற்காத்து கொள்ளும் அளவிற்கு அதன் பலத்தை அதிகரிப்போம், மற்றும் நேட்டோவின் கிழக்குப் பகுதியில் நமது நட்பு நாடுகளை வலுப்படுத்துவோம்.
அதேசமயம், சனிக்கிழமை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் Sergeo Lavrov உடன் நான் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளேன்.
பிரச்னையை தீர்ப்பதற்கான அமெரிக்காவின் உத்தேசம் குறித்த ரஷ்யாவின் நிலைப்பாடு பற்றி Lavrov-விடம் கேட்பேன் என பிளிங்கன் கூறினார்.
இதுவரை, ரஷ்யாவிடமிருந்து பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மட்டுமே நாம் பார்த்துள்ளோம்.
இது மிகவும் முக்கியமான தருணம். என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என பிளிங்கள் தெரவித்துள்ளார்.