எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை
ஈரானில் எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஒரு தொழிலதிபர், அவர் செய்த ஒரு தவறால் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.
வெளிநாடுகளுக்கு விற்பனை
கடந்த 2013 ஆம் ஆண்டு ஈரானின் கோடீஸ்வர தொழிலதிபரான Babak Morteza Zanjani, பணமோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட 13.5 பில்லியன் டொலர்கள் (சுமார் 116,194.5 கோடி ரூபாய்) சொத்துக்களைக் குவித்த சஞ்சானி, குறுகிய காலத்தில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 40 வயதின் முற்பகுதியிலேயே ஈரானின் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாறினார்.
மஹ்மூத் அஹ்மதிநெஜாத் ஜனாதிபதியாக இருந்தபோது சஞ்சானி கைது செய்யப்பட்டார். ஈரானிய எண்ணெயை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்காக தனது தனிப்பட்ட கணக்குகளுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை சட்டவிரோதமாக மாற்றியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நேரத்தில், மேற்கத்திய தடைகள் ஈரானின் வங்கி முறையை முடக்கி, வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளைத் தடுத்தன. ஆனால் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி சஞ்சானி தனது சொந்தக் கணக்குகளில் சட்டவிரோதமாகப் பணத்தைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி பதவியேற்றதும், சஞ்சானி கைது செய்யப்பட்டார். ஈரானிய அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படவிருந்த எண்ணெய் வருவாயிலிருந்து 2.1 பில்லியன் டொலர்களை (ரூ. 24,109.6 கோடி) மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மீண்டும் ஈரானில் தொழில்
மூன்று வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, கீழ் நீதிமன்றம் ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில் அவர் குற்றவாளி எனக் கண்டறிந்து மார்ச் 2016 இல் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இருப்பினும், அவரது மரண தண்டனை பின்னர் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
மட்டுமின்றி, சட்டவிரோதமாக சம்பாதித்த தொகையை அவர் அரசாங்கத்திற்குத் திருப்பிச் செலுத்தியதை அடுத்து ஜனவரி 2025ல் சஞ்சானி விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து மீண்டும் அவர் ஈரானில் தொழில் செய்ய முன்வந்ததுடன், அவரது Avan Rail நிறுவனம் ஈரான் அரசாங்கத்துடன் 800 மில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |