மனைவி வீட்டிற்குள், கணவன் தோட்டத்தில்., மர்மமாக இறந்து கிடந்த பிரித்தானிய தம்பதி!
பிரித்தானியாவில் மாளிகை வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெஸ்ட் மிட்லேண்ட்ஸில் கெனில்வொர்த் சாலையில், கோவென்ட்ரி தெருவில் 1.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு மாளிகை வீட்டில் 2 பேர் இறந்து கிடந்ததாக நேற்று பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 999 குழுவினர் மற்றும் மருத்துவர்கள், தம்பதியினர் இறந்துவிட்டதாக உறுதிசெய்தனர். வீட்டில் அவர்களைத் தவிர யாரும் இருந்ததாக தெரியவில்லை என்பதால், இது ஒரு கொலை-தற்கொலைச் சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.
உயிரிழந்தவர்கள், சேவா படியால் (87) மற்றும் அவரது மனைவி சுக்ஜித் (73) என உறுதி செய்யப்பட்டது. சுக்ஜித் வீட்டின் அறையிலும், சேவா படியால் வீட்டின் பிற்புற தோட்டத்திலும் இறந்து கிடந்தனர்.
தம்பதியினரின் சடலங்கள் மருத்துவ பரிசோதைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் முதற்கட்ட முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அக்கம்பக்கத்தில் விசாரிக்கப்பட்டதில், சேவா படியால் ஒரு துணிக்கடை வியாபாரி என்றும், அவர்களுக்கு 2 பிள்ளைகள் இருப்பதாகவும், சமீப காலமாக இருவரும் இந்த மாளிகை வீட்டில் தனியாகவே வாழ்ந்துவந்ததாக கூறப்பட்டது.