கண்ணாடிகள் அணிவதனால் மூக்கு பகுதியில் தழும்பு ஏற்படுகின்றதா? இதனை எப்படி போக்கலாம்?
இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கும் கண்ணாடிகள் அணிவதும் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. இதற்கு காரணம் கண்களுக்கு வேண்டிய சத்துக்கள், உடலில் போதிய அளவில் இல்லாததால், கண்களின் சக்தியானது குறைகிறது.
அதிலும் கண் பிரச்சனையால், தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும்.இது முக அழகையே சில நேரங்களில் கெடுத்துவிடும்.
காரணம் மூக்கு பகுதியில் பிரேம்கள் அழுத்தமாக பதிவதனால் தான் இதுபோன்ற பிரச்சினை சந்திக்க நேரிடுகின்றது.
இதனை போக்க அதிக பணத்தை தான் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு கூட சரி செய்ய முடியும். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
- கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி ஜெல்லை எடுத்து வடுக்கள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் அழுத்தமாக தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம்.
- உருளைக்கிழங்கை நறுக்கி மிக்சியில் அரைத்து அதன் சாற்றை பஞ்சில் முக்கி தழும்புகள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் தடவ வேண்டும். வாரத்திற்கு நான்கு முறை செய்து வந்தால் விரைவில் தழும்புகள் மறையத் தொடங்கும்.
-
வெள்ளரிக்காயும் தழும்புகள் மறைவதற்கு உதவும். அதனை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வடுக்கள் இருக்கும் பகுதியில் வைத்து 30 நிமிடங்கள் கழித்து எடுத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
- எலுமிச்சை சாறில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்டுகள் வடுக்களை நீக்கும் தன்மை கொண்டது. அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து மூக்கு பகுதியை சுற்றி அழுத்தமாக தடவ வேண்டும். அப்போது மூக்கு பகுதியில் குளிர்ச்சி தன்மையை உணர முடியும். குளிர்ச்சி நீங்கியதும் முகத்தை கழுவி விடலாம்.