ஆபரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் விதமாக பனாரஸ் சேலையை வடிவமைத்த நெசவாளர்
ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நெசவாளர் ஒருவர் பனாரஸ் சேலையை வடிவமைத்துள்ளார்.
பனாரஸ் சேலை வடிவமைப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் ஆபரேஷன் சிந்தூரை தொடங்கிய இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த விஜய் பவசிங் என்ற நெசவாளர், ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பனாரஸ் சேலையை வடிவமைத்துள்ளார்.
இந்த சேலையில் இந்திய ராணுவத்தை கவுரவிக்கும் வகையில் பிரமோஸ், ரபேல், எஸ்.400, ஐ.என்.எஸ். விக்ராந்த் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் புகைப்படங்கள் ஆகியவை இடம்பிடித்துள்ளது.
மேலும், சேலையின் மையப்பகுதியில் ரபேல், பிரமோஸ், எஸ்.400, இந்திய வீரர்கள் படையின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Varanasi, Uttar Pradesh: Banarasi saree traders have creatively integrated Operation Sindoor themes into their designs, highlighting the Indian armed forces' fight against terrorism. These unique sarees have become popular, reflecting national pride and drawing widespread… pic.twitter.com/zGgBWGVmAw
— IANS (@ians_india) May 22, 2025
இதனை அந்த நெசவாளர் கேப்டன் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோருக்கு நேரில் சென்று வழங்கவுள்ளார். தற்போது, இந்த சேலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |