மொத்த வாழ்க்கையும் தலைகீழானது... லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞரின் பகீர் அனுபவம்
வெம்ப்லி பகுதியை சேர்ந்த நபர் சாலை விபத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டவர் தற்போது நிலையில் முதன்முறையாக தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடந்தவை அனைத்தும் ஒரு கனவு போல
வெம்ப்லி பகுதியை சேர்ந்தவர் 35 வயதாகும் கௌசிக் சின்ஷவத்கர். இவரே சாலை விபத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டவர்.
2016 மே மாதம் தமது புதிய பணியிடத்தில் இருந்து வாடகை டாக்சி ஒன்றில் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார் கெளசிக். அப்போது எதிர்பாராதவகையில் இன்னொரு வாகனத்துடன் பலமாக மோதிக்கொண்டுள்ளது இவர் சென்ற டாக்சி.
Image: Irwin Mitchell
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட கெளசிக், மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு மூளையில் காயம்பட்டுள்ளதாகவும், விரல்கள் சில துண்டிக்கப்படும் நிலையில் இருந்ததாகவும், விலா எலும்புகளும் நொறுங்கிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பல வாரங்கள் சுயநினைவற்ற நிலையில் இருந்த கெளசிக், கண் விழித்த பின்னர், நடந்தவை அனைத்தும் ஒரு கனவு போல இருந்தது என்றார். தமக்கு ஏற்பட்டிருந்த அந்த விபத்தின் தாக்கத்தை உணர பல நாட்களானது எனவும் கெளசிக் குறிப்பிட்டுள்ளார்.
வருத்தப்படும் நாட்களும் உண்டு
வாழ்க்கை மிகக் கடுமையாக சோதித்தாலும், உயிர் மிச்சம் இருக்கிறதே என்பதை உணர்ந்து நிம்மதி அடைந்தாலும், தமக்கு நேர்ந்ததை எண்ணி வருத்தப்படும் நாட்களும் உண்டு என்கிறார்.
மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர், இனி பழைய வாழ்க்கை வாழ்வது கடினம் தாம் என எண்ணியதாகவும், ஆனால் தற்போது தமது குறைகளுடன் பொருந்தி வாழ கற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த கோர விபத்துக்கு பின்னர் இதுவரை அவர் வேலைக்கு செல்லவில்லை. அவரது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பணியாளர் ஒருவரையும் அமர்த்திக்கொண்டுள்ளார்.
தமது வாழ்க்கை மொத்தமாக சாலை விபத்து தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணித்துள்ளதாக கெளசிக் தற்போது குறிப்பிடுகிறார்.