107 ரன் இலக்கை 11 ஓவரிலேயே எட்டிய அணி! ஒயிட்வாஷ் செய்து மகுடம் சூடிய மகளிர் படை
மகளிர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது.
21 ஓவர் போட்டி
டவுன்டனில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் மகளிர் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின.
Wait 5 hours to come back out to the middle...
— England Cricket (@englandcricket) June 7, 2025
and first ball, Charlie Dean delivers 🤝 pic.twitter.com/yZhksgpOeZ
மழை காரணமாக போட்டி 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட்டுக்கு 106 ஓட்டங்கள் எடுத்தது.
கியானா ஜோசப் 34 (44) ஓட்டங்களும், ஆலியா அல்லெயனே 27 (18) ஓட்டங்களும் எடுத்தனர். சாரா கிளென் 3 விக்கெட்டுகளும், எம் ஆர்லோட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியில் மிரட்டியது. சோஃபியா டங்க்ளே 26 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நட் சிவர்-பிரண்ட் பவுண்டரிகளை விரட்டினார்.
தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
இதன்மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர, இங்கிலாந்து அணி 10.5 ஓவர்களில் 109 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அணித்தலைவர் நட் சிவர்-பிரண்ட் 33 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் விளாசினார். அலிஸ் கேப்ஸி ஆட்டமிழக்காமல் 20 (11) எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது. சாரா கிளென் (Sarah Glenn) ஆட்டநாயகி விருதையும், ஏமி ஜோன்ஸ் தொடர் நாயகி விருதையும் பெற்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |