மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கும் மமதா! பதவியேற்பு விழா எப்போது?
மேற்கு வங்கத்தின் முதல்வராக மே 5-ஆம் திகதி மமதா பானர்ஜி பதவியேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி தோல்வியடைந்த நிலையில், சட்ட ரீதியாக மீண்டும் மாநில முதல்வராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக் குழு தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக இன்று (மே 3) இரவு 7 மணிக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கரை சந்தித்து ஆட்சி அமைக்க மம்தா உரிமை கோரவுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் 292 சட்டமன்ற தொகுதிகளில் 213 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
எனினும் தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் முதல்வர் வேட்பாளரான மமதா பானர்ஜி, பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.
சட்டப்பேரவைத் தொகுதியில் தோல்வியடைந்தாலும், முதல்வராக பதவியேற்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதால், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று மம்தா ஆட்சியமைக்க உள்ளார்.