இரவில் சாப்பிட்ட பிறகு உடனே நடைப்பயிற்சி செய்வதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நடைப்பயிற்சி என்பது முக்கியமான ஒன்று. ஜிம்மிற்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை வீட்டிலே விளையாட்டு அல்லது நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
தற்போது இருக்கும் காலகட்டத்தில் நாம் அனைவருமே மிகவும் பிஸியாக இருக்கிறோம். சில பொதுவான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. சிலர் இரவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள்.
இது சரியா? தவறா? என்பது தெரியாமலே செய்து கொண்டிருப்பர். சரி வாங்க இரவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகளை குறித்து பார்க்கலாம்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்:-
- இரவு உணவிற்கு பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது உங்கள் செரிமானத்தை வேகமாக்குகிறது. இதனால் உடலில் உள்ள நச்சு தன்மைகள் வெளியேறுவதோடு உடலில் உள்ள உறுப்புகள் சிறப்பாக வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
- சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு தானாகவே அதிகரிக்கும். ஆனால் இரவு உணவிற்குப் பின் நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
- நள்ளிரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளும் சிற்றுண்டி பொதுவாக ஆரோக்கியமற்றது. இது பொதுவாக உடல் எடையைச் அதிகரிக்கச் செய்யும். உணவுக்கு பின் நடைப்பயிற்சி செய்தால் இரவில் எந்தவிதமான பசியையும் ஏற்படுத்தாது.
- உங்களுக்கு இரவில் தூங்குவதில் சிக்கல் இருந்தால் நீங்கள் படுக்கைக்குச் செல்லும் முன்னர் நடைப்பயிற்சி செய்யுங்கள். இதனால் நல்ல ஆழ்ந்த உறக்கம் உங்களுக்கு கிடைக்கும்.
-
இரவு உணவிற்குப் பிறகு மேற்கொள்ளும் நடைப்பயிற்சி உங்களை மன அழுத்தத்தில் இருந்து வெளியேற வைக்கும்.