தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?
எலுமிச்சை பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. இதனை தண்ணீரோடு கொதிக்க வைத்து அருந்தினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகின்றது.
அதோடு மட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்க உதவுகிறது. இது போன்று தண்ணீரில் லெமன் கலந்து குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றது குறித்து பார்க்கலாம்..
தயாரிக்கும் முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொள்ளவும். அதில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு இஞ்சி, மற்றும் 1 ஸ்பூன் தேன் போன்றவற்றை சேர்த்து கொண்டு தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி தினமும் குடித்து வந்தால் நன்மைகள் ஏராளம்.
நன்மைகள்:-
- உடலை குறைக்க நினைப்பவர்கள் இந்த பானத்தை கண்ணை மூடி குடிக்கலாம். தினமும் இந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து எடையை ஈசியாக குறைக்க உதவுகின்றது.
- செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு முகப்பரு அதிகமாக வரும். இந்த எலுமிச்சை சேர்ந்த நீர் பருகுவது செரிமான பிரச்சனையை சரி செய்யும். அதோடு முகப்பரு வராமல் தடுக்கின்றது.
- இந்த பானம் நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். மேலும் இதனை தொடர்ந்து ஒரு மாத காலம் பின்பற்றி வந்தால் அடிக்கடி சளி பிடிப்பதில் இருந்து விடுபடலாம்.
- அதிக கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடுபவர்கள் மற்றும் மது சிகரெட் போன்ற போதைப் பொருட்கள் பயன் படுத்துபவர்களின் கல்லீரல் அதிகமாக பாதிக்கும். இவர்கள் எலுமிச்சை கலந்த தண்ணீரை எடுத்து கொண்டால் கல்லீரல் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.
-
இது தவிர உடலின் நச்சுநீக்கியாகவும் செயல்படும். அதோடு தோல், சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரல் ஆகியவற்றையும் சுத்தீகரிக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது.