ஜங் புட் உணவுகள் குழந்தைகளுக்கு கொடுப்பதனால் ஏற்படும் தீமைகளை என்ன தெரியுமா?
பொதுவாக இன்றைய காலத்தில் பல குழந்தைகள் ஜங் புட்டை அதிகமாக எடுத்து கொள்கின்றனர்.
இதனால் சிறுவயதிலே அவர்கள் நோய் வாய்பட காரணமாக அமைகின்றது. ஜங் புட்களை அதிகம் உட்கொள்வதால் பல நோய்களை ஏற்படுத்தி விடுகின்றது.
அந்தவகையில் ஜங் புட் எடுத்து கொள்வதனால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
என்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்?
- ஜங் புட்களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதற்றம், உடற்பருமன் போன்றவை ஏற்படுகிறதாம்.
- இந்த வகை உணவுகள் கொழுப்புச்சத்து அதிகம் கொண்டவை. குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவையும் ஏற்படுகின்றன.
- வறுத்த உணவுகள் மற்றும் மாதிரியான பாக்கெட் உணவுகளிலும் ஏற்படுகின்றன. இந்த வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆய்வு என்ன சொல்கின்றது?
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில வகை ஜங் உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் அறிவு மழுங்குகிறது எனவும், மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது.
இனிப்பை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது. அதனால் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது நலம்.