ராஜ குடும்பத்தை மீண்டும் பதற்றம் அடைய செய்துள்ள ஹரி... இம்முறை இரகசியமாக என்ன செய்திருக்கிறார் பாருங்கள்!
ஓபரா வின்ஃப்ரேக்கு பேட்டியளித்து ராஜ குடும்பத்தின்மீது சேற்றை வாரி இறைத்த பிரித்தானிய இளவரசர் ஹரி, தற்போது இரகசியமாக புத்தகம் ஒன்றை எழுதி குடும்பத்தினரை பதற வைத்திருக்கிறார்
. கடந்த ஒரு வருடமாக அந்த புத்தகத்தை இரகசியமாக எழுதிவந்த ஹரி, தற்போது அதை விநியோகஸ்தர் ஒருவரிடம் நல்ல விலைக்கு விற்றுள்ளார். அந்த புத்தகம், 2022 இறுதியில் வெளியாக உள்ளது.
ஒரு ராஜ குடும்ப உறுப்பினர் இதுபோல் புத்தகம் எழுதி வெளியிடுவது இதுவே முதல்முறை என கருதப்படுகிறது. இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ள Penguin Random House என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம், முதல் முறையாக இளவரசர் ஹரி தனது அனுபவங்கள், சாகஸங்கள், இழப்புகள் மற்றும் தன்னை செதுக்கிய வாழ்க்கைப் பாடங்கள் குறித்த விடயங்களை அந்தரங்கமான மற்றும் மனதை தொட்ட சுயசரிதையாக எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ராஜ குடும்பத்தைப் பதற வைத்துள்ள அந்த புத்தகத்தில் என்னென்ன எழுதப்பட்டிருக்கலாம்? தங்கள் மகன் ஆர்ச்சியின் தோலின் நிறம் எவ்வளவு கருப்பாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியவர் யார்? இளவரசர் வில்லியமுக்கும் ஹரிக்கும் இடையிலான பிளவுக்கு உண்மையான காரணம் என்ன? தந்தை சார்லஸ் என்ன விதத்தில் ஹரிக்கு மனவேதனையை ஏற்படுத்தினார்? இளவரசி கேட்டுக்கும், ஹரியின் மனைவி மேகனுக்கும் இடையில் பிரச்சினை வரக் காரணம் என்ன? ஹரி மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பியபோது ராஜ குடும்பத்தினர் அவரை எப்படி நடத்தினார்கள்? தங்கள் குழந்தைக்கு லிலிபெட் என பெயரிடுவதற்கு முன் ஹரியும் மேகனும் மகாராணியாரிடம் அனுமதி கோரினார்களா? மேகனால் அரண்மனை வேலையை விட்டதாக கூறிய உதவியாளர்கள் யார் யார்? மேகன் தற்கொலை எண்ணங்களுடன் வாடியது குறித்து எந்த மூத்த ராஜ குடும்ப உறுப்பினர் அறிந்திருந்தார்? தன் தாயை ராஜ குடும்பம் நடத்திய விதம் குறித்து ஹரி என்ன கருதுகிறார்? என்பது போன்ற கேள்விகளுக்கு ஹரியின் புத்தகம் விடையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், குடும்பத்தினருடனான பிளவை சரி செய்யும் முயற்சியில் ஹரி இறங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டால், ஹரியால் எப்படி உறவுகளுக்கிடையில் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய முடியும் என ராஜ குடும்ப நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.