பிரித்தானியாவின் பயணப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவுகள்! என்னென்ன..? வெளியான முழு விபரம்
பிரித்தானியாவின் தற்போதைய பயணப் பட்டியலில் புதிதாக பரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரித்தானியா அதன் பயணப் பட்டியலை மேலும் கடுமையாக்கியுள்ளது.
அதாவது, பச்சை கண்காணிப்பு மற்றும் அம்பர் பிளஸ் பிரிவுகளை அதன் பயணப் பட்டியலை புதிதாக சேர்த்துள்ளது.
ஆக மொத்தம் பிரித்தானியாவின் பயணப் பட்டியில் பச்சை, பச்சை கண்காணிப்பு, அம்பர், அம்பர் பிளஸ், அம்பர் கண்காணிப்பு ( இன்னும் அறிமுகப்படுத்தவில்லை) மற்றும் சிவப்பு உள்ளது.
பச்சை: பச்சை பரிவில் உள்ள நாடுகளிலிருந்து பிரித்தானியா திரும்பும் பயணிகள் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும், சோதனையில் தொற்று இருப்பது உறுதியானால் மட்டும் தனிமைப்படுத்த வேண்டும்.
பச்சை கண்காணிப்பு: பச்சை பட்டியலில் இருந்து அம்பர் நகரும் அபாயத்தில் உள்ள நாடுகளை அடையாளம் காட்டுகிறது.
அம்பர்: இன்று முதல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து பிரித்தானியா வரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.
மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் கொரோனா தொற்று பதிப்பு இல்லை என சோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும்.
அம்பர் பிளஸ்: இந்த பட்டியலில், பிரான்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது, இந்த பட்டியலில் உள்ள நாட்டிலிருந்து பிரித்தானியா வரும் பயணி இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாரும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.
அம்பர் கண்காணிப்பு (இது இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை) : இது அம்பர் பட்டியலில் இருந்து சிவப்பு பட்டியலுக்கு நகரும் நாடுகளை அடையாளம் காணும்.
சிவப்பு:
சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகள் சொந்த செலவில் ஹோட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என சோதனையில் உறுதி செய்ய வேண்டும்.