ஜேர்மனியில் அமையும் புதிய அரசு: வெளிநாட்டினர் மீது ஏற்படுத்தவிருக்கும் தாக்கங்கள் என்னென்ன?
ஜேர்மனியில் மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டுள்ளன.
The Social Democrats (SPD), Greens மற்றும் the Free Democrats (FDP) ஆகியவை ஆட்சியமைக்க திட்டமிருக்கும் கட்சிகள்.
மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கும் பட்சத்தில், அதனால் ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் எந்த வகையில் பாதிக்கப்படலாம் மற்றும் இனி ஜேர்மனியில் குடியேற இருக்கும் வெளிநாட்டவர்கள் குறித்த இந்த கட்சிகளின் பார்வை என்னவாக இருக்கும் என்பதைக் குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.
புலம்பெயர்தல் சீர்திருத்தம்
அதிர்ஷ்டவசமாக மூன்று கட்சிகளுமே புலம்பெயர்தலுக்கு சாதகமானவையாகவே உள்ளன. மேலும், அவை பணியிடங்களில் காணப்படும் காலியிடங்களை நிரப்பும் வகையில் புலம்பெயர்தல் அமைப்பை மாற்றியமைக்கும் என்றே தோன்றுகிறது.
அக்கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’ஜேர்மனி ஒரு நவநாகரீக புலம்பெயர்தல் நாடு. பல நாடுகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் இந்நாட்டைத் தங்கள் சொந்த நாடாக்கி, குடும்ப வாழ்வைத் தொடங்கி, அதற்காக வருவாய் ஈட்டத் தொடங்கியுள்ளார்கள். ஆகவே, நாங்கள் ஒரு நவநாகரீக குடியுரிமைச் சட்டத்தை உருவாக்க உள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கட்சிகளுமே பொதுவாக பார்க்கும்போது குடியுரிமை பெறுதலை எளிதாக்குவதற்கும், ஜேர்மனியின் கடுமையான இரட்டைக் குடியுரிமை சட்டங்களை மாற்றுவதற்கும் சாதகமானவையாகவே காணப்படுவது தெரிகிறது.
ஜேர்மன் மக்களுடன் எளிதில் ஒன்றிணைந்து தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளத்தக்கவர்களுக்கு, விரைவாக, சட்டப்படி, பாதுகாப்பான வாழிட உரிம நிலை கிடைக்கவேண்டும். அதற்கான வழிமுறைகளை மாற்றுவதையும், ஒன்றிணைந்து செயல்படும் வாய்ப்புக்களை மேம்படுத்துவதையும் சாத்தியமாக்குவோம் என்கிறது அக்கட்சிகளின் அறிக்கை.
ஜேர்மனியின் இரட்டைக் குடியுரிமைச் சட்டங்கள் மாறுமா?
இந்த அறிக்கை வெளியாகியுள்ள பத்திரிகை, இந்த கூட்டணிக்கட்சிகள் புள்ளிகள் அடிப்படையிலான புலம்பெயர்வோருக்கான அமைப்பு ஒன்றை அறிமுகம் செய்ய விரும்புவதாக தெரிவிக்கிறது. ஆகவே, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானிய நடைமுறைகளைப் போல் அது அமையலாம்.
அதன்படி, வேலை தேடும் குடிமக்கள் அல்லாதவர்கள், கல்வி, மொழிப்புலமை, ஊதியம் அல்லது வேலை வாய்ப்புக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிகளை சேமிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவு புள்ளிகள் சேரும்போது, அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆக, இது முதற்கட்ட திட்டம்தான் என்றாலும், புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமையைப் பொருத்தவரை இந்த கட்சிகளின் கூட்டணி அமைக்க இருக்கும் ஆட்சி, வெளிநாட்டவர்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்றே தோன்றுகிறது.
New: Germany’s 🚦coalition want to adapt laws to make it easier to self-ID as a trans person, lower the voting age to 16, and make it easier to become a German citizen and for skilled workers to immigrate
— A spectre is haunting James Jackson 👻 (@derJamesJackson) October 15, 2021
Pretty stark contrast to the UK