ஏர் இந்தியா விமானம் விழுந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் நிலை என்ன?
இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அஹமதாபாத் எனுமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் பலியான விடயம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில், விமானத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத சிலரும் பலியாகியுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
விமானம் விழுந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் நிலை
ஆம், விபத்துக்குள்ளான அந்த விமானம், மருதுவக்கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டல் ஒன்றின் மீது விழுந்துள்ளது. விமானம் விழுந்ததில், ஹாஸ்டலில் தங்கியிருந்த நான்கு மருத்துவ மாணவர்களும், ஒரு மருத்துவரின் மனைவியும் பலியாகியுள்ளார்கள்.
19 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இரண்டு மாணவர்களைக் காணவில்லை என்றும், மருத்துவக்கல்லூரியின் டீன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு மருத்துவரின் உறவினர்கள் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும், மற்றொரு மருத்துவரின் உறவினர்கள் மூன்று பேரைக் காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
I'm still in shock
— Dr. Rishi Bose (@Rishii_Bose) June 12, 2025
My fingers are trembling my heart is shattered my cousin is no more.
He must was in the hostel mess, sharing dreams with friends, when the Air India crash stole him away. He was supposed to come home last week but stayed back. Now he’ll never return#planecrash pic.twitter.com/kJk6qjMIdG
இந்நிலையில், ஹாஸ்டல் கூரையில் விமானம் விழுந்துள்ளதையும், மாணவர்கள் பாதி சாப்பாட்டில் விட்டுச் சென்ற தட்டுகளையும் காட்டும் காட்சிகளை வெளியிட்டுள்ளார் Dr Rishi Bose என்னும் மருத்துவர்.
தனது உறவினரை தான் இழந்துவிட்டதாகவும், தனது இதயம் நொறுங்கிப்போனதாகவும், அதிர்ச்சியில் இன்னமும் தனது விரல்கள் நடுங்கிக்கொண்டிருப்பதாகவும், அவர் கடந்த வாரமே வீட்டுக்குச் சென்றிருக்கவேண்டும் என்றும், அவர் ஹாஸ்டலிலேயே தங்கிவிட்டதால் அநியாயமாக பலியாகிவிட்டதாகவும் ரிஷி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |