முப்படை தளபதி பிபின் ராவத்தின் தற்போதைய நிலை என்ன? வெளியான முக்கிய தகவல்
குன்னூரில் முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கி கொண்டு பலர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 14 ராணுவ உயரதிகாரிகள் ராணுவ ஹெலிகாப்டரில் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் ஒன்றரை மணிநேரமாக தீ பிடித்து எரிந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய 14 பேரில் இதுவரை 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முப்படை தலைமை தளபதி பிபன் ராவத் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.