பாதாம் அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் ?
பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் நிறைய இருக்கின்றது.
வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இருப்பினும் பாதாம் அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. இது பக்கவிளைவுகளே ஏற்படும்.
அந்தவகையில் தற்போது பாதாம் அதிகம் எடுத்து கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
- 28 கிராம் பாதாம் பருப்பில் சுமார் 164 கலோரிகள் உள்ளன. தினசரி உணவுடன் சேர்த்து உட்கொள்ளும்போது, அது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். எனவே நாள் முழுவதும் 5 முதல் 6 பாதாம் துண்டுகளை மட்டுமே சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
- பாதாமில் நார்ச்சத்து அதிகம். அதிகப்படியான நார்ச்சத்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே பாதாம் பருப்பை அதிகம் சாப்பிட்டால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும், இதனால் வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் மற்றும் வயிற்றில் தசை பிடிப்புகள் கூட ஏற்படலாம்.
- பாதாமில் குடலில் கரையக்கூடிய ஆக்சலேட் அதிகம் உள்ளது. உடலில் அதிக அளவு ஆக்சலேட் இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே பாதாமை குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள்.
- உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்கவும். பாதாம் பருப்பு சிலருக்கு வாய் அலர்ஜி சிண்ட்ரோம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. தொண்டை புண் மற்றும் உதடுகளின் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.