புற்றுநோயால் அவதியுற்றுவரும் மன்னர் சார்லஸ்: மன்னர் மரணமடைந்தால் அடுத்து என்ன நடக்கும்?
புற்றுநோய் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மன்னர் சார்லசின் உடல் நிலை மோசமடைந்துவருவதாக அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், மன்னர் மரணமடையும் பட்சத்தில், அவரது இறுதிச்சடங்கை எப்படி நடத்துவது என்பது குறித்த திட்டம் தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னருடைய இறுதிச்சடங்கு தொடர்பான திட்டத்துக்கு Operation Menai Bridge என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
மன்னர் மரணமடைந்தால் அடுத்து என்ன நடக்கும்?
அரசு அதிகாரிகளுக்கு தகவல்
மன்னர் மரணமடைந்ததும், அவரது மரணச் செய்தி முறைப்படி பிரித்தானிய பிரதமர் முதல் பிரித்தானிய அதிகாரிகள் வரை அனைவருக்கும் அறிவிக்கப்படும். அடுத்து, அவர் எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் மன்னரோ அந்த நாடுகளுக்கெல்லாம் மன்னருடைய மரணச் செய்தி தெரிவிக்கப்படும்.
பொதுமக்களுக்கு அறிவிப்பு
பின்னர் மன்னருடைய மரணச் செய்தி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும். பக்கிங்காம் அரண்மனையில் வாசலில் மன்னருடைய மரணச் செய்தி குறித்த அறிவிப்பு ஒட்டப்படும். பின்னர் செய்தித்தாள்களுக்கு செய்தி தெரிவிக்கப்படும்.
பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
மன்னர் மறைவைத் தொடர்ந்து, முக்கிய அரசு கட்டிடங்களில் பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மன்னருடைய மரணச் செய்தி வெளியானதும், இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து நாடாளுமன்றங்களில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படும்.
மக்கள் அஞ்சலி
கடைகள் மூடப்படும், நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் நாட்கள் துவங்கும். மக்கள் பக்கிங்காம் அரண்மனை வாசலில் பூக்கள் முதலானவற்றைக் கொண்டு வைத்து அஞ்சலி செலுத்தத் துவங்குவார்கள்.
மன்னருடைய சவப்பெட்டி, மக்கள் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் வைக்கப்படும். சுமார் 10 நாட்களில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும்.
அடக்கம்
இறுதிச்சடங்கு ஆராதனைக்குப் பின், மன்னருடைய உடல் விண்ட்சர் மாளிகைக்குக் கொண்டு செல்லப்படும். அங்குதான் மற்ற ராஜ குடும்ப உறுப்பினர்களுடன் மன்னருடைய உடலும் அடக்கம் செய்யப்படும்.
மன்னராகும் வில்லியம்
மன்னர் மரணமடைந்தால், உடனடியாக இளவரசர் வில்லியம் மன்னராவார். உடனடியாக அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். 24 மணி நேரத்துக்குள் அவரை முறைப்படி மன்னராக்க, அதற்கான கவுன்சில் கூடும்.
அவர் பதவியேற்க சில மாதங்கள் ஆகும் என்றாலும், மன்னர் மரணமடைந்ததுமே தானாகவே இளவரசர் வில்லியம் மன்னராகிவிடுவார்.
புதிய ராணி
வில்லியம் மன்னரானதும், அவரது மனைவியான இளவரசி கேட் ராணியாவார். என்றாலும், அவர் எலிசபெத் மகாராணியைபோல் மகாராணியாக மாட்டார். காரணம், அவர் நாட்டை ஆளும் ராணி அல்ல, மன்னரின் மனைவி என்பதால் ராணி (Queen consort).
தற்போது ராணியாக இருக்கும் கமீலா மன்னருடைய மரணத்துக்குப் பின், Queen dowager என அழைக்கப்படுவார். இந்த பட்டம், மன்னருடைய விதவைக்கு கொடுக்கப்படும் பட்டமாகும்.
அடுத்த வேல்ஸ் இளவரசர்
தந்தை வில்லியம் மன்னரானதும், அவாரது மூத்த மகனான குட்டி இளவரசர் ஜார்ஜ் அரியணையேறும் வரிசையில் அடுத்த நபராவார். அத்துடன், அவர் வேல்ஸ் இளவரசர் என்னும் பட்டத்தையும் பெறுவார். அவரது தங்கை மற்றும் தம்பியான சார்லட்டும், லூயிஸும் இளவரசி, இளவரசர் என அழைக்கப்படுவார்கள்.
புதிய கரன்சி
அரசு, புதிய மன்னருடைய புகைப்படத்துடனான புதிய கரன்சியை அச்சிடும். பாஸ்போர்ட் மற்றும் தபால்தலைகளிலும் வில்லியம் புகைப்படம் அச்சிடப்படும். என்றாலும், அதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |