மக்களே உஷார்! மீந்து போன பிரியாணியை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் உடலில் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்துமா?
இந்த உலகத்தில் அனைவரும் ருசித்து சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. எப்படி பிரியாணி சாப்பிட வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமே உள்ளது.
தினமும் பிரியாணி கொடுத்தாலும் சந்தோஷமாக சாப்பிட ஒரு கூட்டமே உள்ளது. ஆனால் ருசிக்கு ஆசைப்பட்டு பலர் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கின்றனர்.
குறிப்பாக மீந்து போன பிரியாணியை வீணாக்க மனம் இல்லாமல் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் பல தீமைக்கு ஆளாகி வருகின்றனர். சரி வாங்க அவ்வாறு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..
- பிரியாணியை சூடுப்படுத்தி சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால்,கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
- நீங்கள் பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்துவதால் அது உங்களுக்கு இதய நோய் வரக் காரணமாக அமைகிறது. இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
- அதே சமயம் சூடுபடுத்திய பிரியாணியுடன் குளிர்பானங்களைச் சேர்த்து குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
-
வயிறு நிறைய சாப்பிடுதல், சரியாக மென்று சாப்பிடாமல் வேகமாக அவசரமாக சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்றில் எரிச்சல் உண்டாகிறது. மேலும் வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.