ட்ரம்பை முதன்முறையாக சந்திக்கும் ஜேர்மன் சேன்ஸலர்: என்ன நடக்கும் என ஆவலுடன் காத்திருக்கும் உலகம்
ஜேர்மனியின் புதிய சேன்ஸலராக பொறுப்பேற்றுள்ள பிரெட்ரிக் மெர்ஸ், அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பை சந்திக்க இருக்கிறார்.
அவர்களுடைய சந்திப்பு எப்படி அமையும் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
ட்ரம்பை முதன்முறையாக சந்திக்கும் மெர்ஸ்
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகமே அடுத்து அவர் என்ன செய்வார் என்று கவனித்துக்கொண்டிருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம், ட்ரம்பின் வரிவிதிப்புகள். முதுகுக்குப் பின்னால் அவரை விமர்சிப்பவர்களும் அவரை நேரில் சென்று சந்தித்து வரிவிதிப்பிலிருந்து விலக்கு பெற முயற்சி செய்துவருகிறார்கள்.
அவ்வகையில், ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸும் ட்ரம்பை இன்று சந்திக்க இருக்கிறார்.
விடயம் என்னவென்றால், மெர்ஸ் ட்ரம்ப் சந்திப்பு, பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் - ட்ரம்பின் சந்திப்பைப் போல இனிமையாக இருக்குமா, அல்லது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி - ட்ரம்ப் சந்திப்பைப் போல கசப்பானதாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதற்குக் காரணங்களும் உண்டு. ஜேர்மானியர்களை மிக மோசமானவர்கள் என்றும், அவர்கள் மில்லியன் கணக்கில் கார்களை அமெரிக்கர்களுக்கு விற்கிறார்கள் என்றும் ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.
அதேபோல, ஜேர்மன் தரப்பும் ட்ரம்பை விமர்சித்துவந்தது. சமீபத்தில்கூட, ட்ரம்புடனான முதல் தொலைபேசி அழைப்பு குறித்து மெர்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் அடிக்கடி ‘கிரேட்’ என்ற வார்த்தையை ட்ரம்ப் பயன்படுத்துவது குறித்து, அவர் பேசுவதுபோலவே பேசிக்காட்டினார்.
ஆக, மெர்ஸ் ட்ரம்பை முதன்முறையாக சந்திக்கும் நிலையில், என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |