Whatapp-ல் பரவும் மத்திய அரசின் இலவச ரீசார்ஜ் சலுகை: உண்மை இது தான்
வாட்ஸ் அப் செயலியில் வேகமாக பரவி வரும் குறுந்தகவல் ஒன்றில், "மத்திய அரசு இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் இலவச ரிசார்ஜ் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
வாட்ஸ் அப்-ல் பரவும் செய்தி
மொபைல் போன்களின் பயன்பட்டால் நிறைய குற்றங்களும் ஏமாற்று வேலைகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சமூக வலைத் தளங்களில் வலம் வரும் தவறான குறுஞ்செய்திகள் மக்களை ஏமாற்றுவதோடு சில பண மோசடிகளும் செய்யப்படுகின்றன.
@Reuters
இதே போல் வாட்சாப்பில் சிலர் போலியான செய்திகளை அனுப்பி அதன் மூலம் தெரியாத நபரிடமிருந்து பணம் பறிக்கும் நிலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
போலியான தகவல்
வாட்ஸ்அப் செயலியில் வேகமாக பரவி வரும் குறுந்தகவல் ஒன்றில், "மத்திய அரசு இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரூ. 239-க்கு இலவச ரிசார்ஜ் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் இலவச ரீசார்ஜ் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும், "நான் எனக்கான 28 நாட்கள் இலவச ரீசார்ஜ்-ஐ பெற்றுக் கொண்டேன், நீங்களும் 28 நாட்கள் இலவச ரீசார்ஜை கீழே உள்ள இணைய முகவரியை க்ளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கடைசி நாள் மார்ச் 30," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
@pib
வைரலாக பரவி வரும் வாட்ஸ்அப் குறுந்தகவலை யாரும் நம்ப வேண்டாம் என PIB தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மத்திய அரசு இவ்வாறு எந்த விதமான இலவச ரீசார்ஜ் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என தெரிவித்து இருக்கிறது.