முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை இயற்கையாக நீக்க உதவும் மாவு.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களின் முகம் முடிகளின்றி மிருதுவாக இருக்கும், ஆனால் சில பெண்களின் முகத்தில் முடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
ஹார்மோன் காரணமாக சில பெண்களுக்கு மீசையும் தடியும் தெரிவதோடு, நெற்றியில் முடிகள் அதிகளவில் இருக்கும்.
அந்தவகையில், முகத்தில் உள்ள முடி நிரந்தரமாக நீங்க இயற்கை முறையில் கோதுமை மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு - 2 ஸ்பூன்
- பால் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- தண்ணீர் - தேவையான அளவு
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, பால் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்துக்கொள்ளவும்.
பின் அதில் சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
இதற்கடுத்து முகத்தில் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது சருமத்தில் உள்ள முடிகள் நீங்கும்.
அதன் பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, உலர்த்த வேண்டும்.
இந்த பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |