கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்? பிரபல விஞ்ஞானி சொன்ன தகவல்
Omicron மாறுபாடு குறித்து சில முக்கிய தகவல்களை அமெரிக்காவின் சிறந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. 2 வது அலை, 3வது அலை என தொடர்ந்து உருமாறி உலகை நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.
கொரோனாவில் இருந்து படிப்படியாக உலகம் மீண்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட Omicron மாறுபாடு உலகை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் Omicron மாறுபாட்டின் பாதிப்பு குறைந்த உடன் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரலாம் என்று சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் Omicron மாறுபாடு கொரோனா தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை தற்போது கூற முடியாது என்று அமெரிக்காவின் சிறந்த விஞ்ஞானி மற்றும் மருத்துவ ஆலோசகருமான அந்தோனி ஃபாசி கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், Omicron மாறுபாடு மற்ற வகைகளைக் காட்டிலும் நோய் வீரியம் குறைவாக உள்ளது. இருந்தாலும் எதிர்காலத்தில் ஒரு புதிய மாறுபாடு தோன்றுவதற்கான சாத்தியம் அதிகமாகவே உள்ளது.
கொரோனா வைரஸை முழுமையாக ஒழிக்க முடியாது. இருப்பினும் இந்த கொரோனா வைரஸ் ஒரு உள்ளூர் நோயாக மாறலாம் என்று தெரிவித்தார்.