பிரித்தானியாவைப்போல அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் எப்போது முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும்?
பிரித்தானியாவைப்போல அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் எப்போது முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும் என்ற கேள்வி வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளரிடம் கேட்கப்பட்டது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட இருப்பதாக அறிவித்துள்ளார்.
அதேபோல அமெரிக்காவிலும் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுமா, எப்போது விலக்கிக்கொள்ளப்படும், என வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளரான Jen Psakiயிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, அந்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
எப்போது அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என கேள்வி எழுப்பப்பட, Jen Psakiயோ, நாம் இப்படி வாழ விரும்பவில்லை, எப்போதுமே இதேபோல வாழ நாம் விரும்பவில்லை என அமெரிக்க அதிபரும் கூறியதைக் கேட்டிருப்பீர்களே, என்று பதிலளித்தார்.
ஆம், மாஸ்க் அணியவே தேவையில்லை என்னும் ஒரு நிலையை அடைய நாம் விரும்புவது உண்மைதான், அந்த நிலையை அடைய, தொடர்ந்து போராட நாம் முயன்றுகொண்டிருக்கிறோம் என்றார் அவர்.
அமெரிக்காவிலும் கொரோனா தொற்று குறையத்தான் செய்தது. ஆனால், டிசம்பரில் Omicron வந்து நிலைமையை மாற்றிவிட்டது.
ஆக, இங்கிலாந்து மக்களுக்கு அவர்கள் இனி மாஸ்க் அணியத்தேவையில்லை என்றும், மார்ச் மாத இறுதிவாக்கில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் கூட, தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் என்றும் அவர்களது தலைவர்கள் கூறியுள்ள நிலையில், அமெரிக்காவோ, இலவச N95 மாஸ்குகளை தன் குடிமக்களுக்கு வழங்க உள்ளது.
ஆக, அமெரிக்கா, பிரித்தானியாவைப்போல முழுமையாக கொரோனா கட்டுப்பாடுகளை இப்போதைக்கு விலக்கிக்கொள்ளப்போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது.